×

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக போர் தொடுப்பதை ஆளுநர் லட்சியமாக கொண்டுள்ளார் : முரசொலி விமர்சனம்

சென்னை : தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக போர் தொடுப்பதை ஆளுநர் லட்சியமாக கொண்டுள்ளதாக முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆளுநர் போன்றோரின் நரித்தனங்களை வாலறுத்த பூமி தமிழ்நாடு என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில், “எப்­படி நினைப்­பது இந்த மனி­தரை? வக்­ர­புத்­திக்­கா­ரர் என்­பதா? குறு­ம­தி­யா­ளர் என கணிப்­பதா? சேடிஸ்ட் என எண்­ணு­வதா? திருந்­தாத ஜென்­மம் எனத் தீர்­மா­னிப்­பதா? – எந்த மனி­தர் குறித்து இத்­த­னைப் பீடிகை என்­பது சொல்­லா­மலே புரிந்­தி­ருக்­கும். இத்­தனை குணங்­க­ளுக்­கும் ஒற்றை உதா­ர­ண­மாக நட­ மா­டிக் கொண்­டி­ருக்­கி­றார் நமது ஆளு­நர் ரவி! அவ­ரு­டைய சேட்­டை­க­ளுக்கு அளவே இல்­லா­மல் போய்க் கொண்­டி­ருக்­கி­றது. சில குரூ­ர­ புத்­திக் கொண்­ட­வர்­கள் திடீ­ரென அம்­பேத்­கர் சிலை­யில் தார் பூசு­வார்­கள். இன்­னும் சில சின்­னப் புத்­தி­யி­னர் தந்தை பெரி­யார் சிலைக்கு கருப்பு வண்­ணம் அடிப்­பார்­கள். இன்­னும் சில சிறு­ம­தி­யா­ளர்களை அண்ணா, வள்­ளு­வர் சிலை ­க­ளுக்கு காவித் துண்டு அணி­விப்­பார்­கள்! – இப்­படி மூளை வளர்ச்­சி­யற்­ற­வர்­கள் இர­வோடு இர­வாக செயல்­ப­டு­வர்! பிடி­பட்ட பின் அதில் சிலர் மன நலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பர் – இன்­னும் பலர் அறிவு முதிர்ச்சி அற்­ற­வர்­க­ளாக விளங்­கு­வர்.

இப்­படி செய்­தி­கள் அவ்­வப்­போது ஏடு­க­ளில் வரும்! அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­ப­டு­வோரை மிஞ்­சி­டும் வகை­யில் வள்­ளு­வ­ருக்கு நமது ஆளு­நர் காவி வண்­ணம் பூசி, நெற்றி கை கால்­க­ளெல்­லாம் விபூ­திப் பட்­டை­களை அணி­வித்து, அந்­தப் படத்தை வைத்து தனது மனைவி சகி­தம் அதற்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­யுள்­ளார்! இதே ஆளு­நர் அவ­ரது மனைவி மற்­றும், ஒன்­றிய இணை அமைச்­சர் முரு­கன் உட­னி­ருக்க, ஓவிய மேதை திரு.கே.ஆர்.வேணு­கோ­பால்­சர்மா பல ஆண்­டு­கள் ஆராய்ந்து, சிந்­தித்து, பெரும் தமி­ழ­றி­ஞர்­கள் அங்­கீ­கா­ரத் து­டன் வரைந்து அளித்து, தமிழ்­நாடு அர­சால் ஏக­ம­ன­தாக ஏற்­கப்­பட்ட வள்­ளு­வர் படத்­துக்கு; முந்­தைய வள்­ளு­ வர் தினத்­தன்று மரி­யாதை செலுத்­தி­யுள்ள நிலை­யில், ஏன்; தற்­போது திடீர் தடு­மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தைச் சிந்­திக்­கும் போது, ஆளு­நர் மன­நி­லை­யில் இப்­படி அடிக்­கடி ஏற்­ப­டும் தடு­மாற்­றங்­கள் குறித்து சரா­சரி மனி­தன் சந்­தே­கம் கொள்­வது இயற்­கை­தானே! வள்­ளு­வர் தினத்­தன்று வாழ்த்து தெரி­வித்த பிர­த­மர் மோடி அவர்­கள், “திருக்­கு­ற­ளில் உள்ள வள்­ளு­வ­ரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்­கை­யில் பல அம்­சங்­க­ளில் நமக்கு வழி­ காட்­டு­கி­றது. காலத்­தால் அழி­யாத அவ­ரது போத­னை­கள் நல்­லொ­ழுக்­கம் மற்­றும் நேர்­மை­யில் கவ­னம் செலுத்த சமூ­கத்தை ஊக்­கு­விக்­கி­றது. நல்­லி­ணக்­கம் மற்­றும் புரிந்­து­ணர்வு கொண்ட உல­கத்தை உரு­வாக்­கு­கி­றது.

அவர் எடுத்­து­ரைத்த அனை­வ­ருக்­கு­மான விழு­மி­யங்க­ளைத் தழு­வு­வ­தன் மூலம் அவ­ரது தொலை­நோக்­குப் பார்­வையை நிறை­வேற்­றி­டு­வோம்”. – எனச் சரி­யான புரிந்­து­ணர் வோடு வள்­ளு­வ­ருக்கு எந்­த­வித மதச்­சா­ய­மும் பூசா­மல் வள்­ளு­வர் தின வாழ்த்­துச் செய்­தியை வெளி­யிட்­டுள்ள நிலை­யில், நமது ஆளு­நர் மட்­டும் வள்­ளு­வர் குறித்து சரி­யான புரி­தல் இன்றி அரை­வேக்­காட்­டுத்­த­னத்­தோடு வள்­ளு­வரை அணு­கி­யுள்­ளார் என்­பதை அவ­ரது வள்­ளு­வர் தின வாழ்த்­துச் செய்தி எடுத்­துக் காட்­டு­கி­றது! “பார­திய சனா­த­னப் பாரம்­ப­ரி­யத்­தின் பிர­கா­ச­மான துறவி” – என வலிந்து ‘வள்­ளு­வர்’ எனும் பெரு­ம­லையை சனா­தன ‘நூல்’ கட்டி தனது பக்­கம் இழுக்க முயற்சி செய்­துள்­ளார்! வள்­ளு­வர் படத்­துக்­குக் காவி வண்­ணம் மட்­டும் பூச­வில்லை கவர்­னர் ரவி; அவ­ரது வாழ்த்­துச் செய்­தி­யில் வர்­ணா­சி­ர­மத்­தை­யும் புகுத்­தி­யுள்­ளார்! ஆம்; மொழி, இனம், காலம், நாடு, மதம் கடந்து வாழ்­வோடு, வாழ்­வி­ய­லோடு பொருந்­திக் கிடக்­கும் குறள் படைத்த அய்­யனை, கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில், அவ­ருக்­குக் காவிச் சாயம் பூசி, பட்டை தீட்டி, பார­திய சனா­த­னத்தை பரப்­பி­விட்­ட­ தா­கப் பர­வ­சம் கொண்­டுள்­ளார் ஆளு­நர்! எத்­தனை சூடு­பட்­டா­லும் திருந்­தாது திரும்­பத் திரும்­பத் தனது வக்­ரத்­த­னத்­தைக் காட்­டிக் கொண்டே இருக்­கும் இவரை; இக்­கட்­டு­ரை­யின் ஆரம்­பத்­தில் குறிப்­பிட்­டுள்ள எந்­த­வகை மனி­த­ராக எண்­ணு­வது? சொம்­புக்­குள் தலையை விட்டு, அந்­தச் சொம்பு தலை­யில் மாட்­டிக்­கொண்­ட­பின் அதி­லி­ருந்து தலையை விடு­வித்­துக் கொள்ள வகை­யும் வழி­யும் தெரி­யாது தவித்­தி­டும் பூனை­யைப் போல பல நேரங்­க­ளில் ஆளு­நர் ரவி, தான் வகிக்­கும் பத­வி­யின் பெரு­மை­யைப் பாழ்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டுக்கு ஆளு­ந­ராக வந்­த­பின் அவர் நடத்­தி­டும் அலப்­ப­றை­க­ளுக்கு அளவே இல்­லா­மல் போய்க்­கொண்­டி­ருப்­ப­தைக் கண்டு கொண்­டி­ருக்­கி­றோம்!

ஆளும் அர­சி­யல் கட்­சி­யோடு மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டுக்­கும், தமிழ் மக்­க­ளின் உணர்­வுக்­கும், தமிழ்க் கலாச்­சா­ரத்­துக்­கும் எதி­ராக அவர் ஏதா­வது ஒரு வகை­யில் போர் தொடுப் ப­தைத் தனது இலட்­சி­ய­மா­கக் கொண்டு செயல்­ப­டு­ கி­றார்! ‘தமிழ்­நாடு’ என்ற பெய­ ருக்கு எதி­ராக மூக்கை நுழைத்­து­விட்டு எல்­லாத் திக்­கி­லி­ருந்­தும் எதிர்­பட்ட எதிர்ப்­பால் மூக்­கு­டை ­பட்­டார்! ஆளு­ந­ருக்­குத் தரப்­பட்ட அதி­கா­ரம், அங்­கீ­கா­ரம் இவற்­றை­மீறி செயல்­பட நினைத்து, தனது சாதுர்­யத்­தைக் காட்­டு­வ­தாக எண்ணி சட்­டப்­பே­ர­வை­யில் அவ­ருக்கு அரசு எழுதி அளித்த உரை­யில் இடைச்­செ­ரு­கல்­கள் நடத்­தி­யும், சில­வற்றை விடுத்­தும் பேசி – அத்­து­மீறி நடந்­த­போது முத­ல­மைச்­சர் தள­பதி தந்த எதிர்­தாக்­கு­தலை எதிர்­கொள்ள இய­லாது சட்­ட­மன்­றத்­தை­விட்டு ஓட்­ட­மும்­ந­டை­யு­மாக வெளி­யே­றி­னார். தனது பெய­ருக்­குப் பின்­னால் ‘ஐ.பி.எஸ்.’ என்ற பட்­டத்­தைப் பதித்­தி­ருப்­ப­வ­ரா­யிற்றே; விவ­ரங்க­ளைப் புரிந்­து­ கொண்டு ‘தனது ஆட்­டம் தமிழ்­நாட்­டில் செல்­லாது’ என முடி­ வெ­டுத்து, தனது அதி­கார வரம்­புக்­குள் அடங்கி செயல்­ப­டு­வார் என எண்­ணி­னோம். ஆனால் அவ­ரது தொடர் நட­வ­டிக்­கை­கள் அவரை திருந்­தும் ஜென்­ம­மா­கக் காட்­டி­ட­வில்லை. ‘உச்­ச­நீ­தி­மன்­றம் தொடர்ந்து குட்­டி­டும் குட்­டு­க­ளால் கூனிக் கு­று­கிப் போயி­ருப்­பார்; இனி எல்லை மீற­மாட்­டார்’ என்ற பல­ரது நினைப்­பி­னை­யும் நிரா­சை­யாக்­கிக் கொண்­டி­ருக்கி­றார்! இப்­போது அய்­யன் திரு­ வள்­ளு­வ­ருக்­குக் காவி வண்­ணம் பூசி, “பிறப்­பொக்­கும் எல்லா உயி­ருக்­கும்….” எனக் குறள் படைத்த அந்­தக் கோமானை, வரு­ணா­ சி­ர­மத்­துக்­குள் வளைத்­துப் போட முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளார். ஆரி­யத்­தின் ஆண­வம், அகங்­கா­ரம், அத்­து­மீ­றல் அத்­த­னை­யை­யும் எதிர்­கொண்டு; அந்த ஆரி­யத்­தையே அடி­ ப­ணி­ய­ வைத்து ஆட்­சி­பீ­டம் ஏறி­யது திரா­வி­டக் ­கொள்­கை­கள்.

இதனை ஆளு­நர் ரவி­யால் மட்­டு­மல்ல; அவ­ருக்­குத் துணை­போ­கும் ஆரிய அடி­வ­ரு­டி­க­ளா­கத் திக­ழும் கோடாரிக் காம்­பு­க­ளா­லும் ஆட்­டவோ அசைக்­கவோ முடி­யாது! வரு­ணா­சி­ர­மக் கொள்­கை­ க­ளால் குட்­டக்­குட்­டக் குனிந்து, புழு­வாய், புன்­மைத் தேரை­யாய் அடங்கி ஒடுங்­கிப் புதைந்­து ­கி­டந்த தமி­ழி­னத்தை; அதன் தன்­மான உணர்­வைத் தட்டி எழுப்­பிய தந்தை பெரி­யா­ரின் பூமி இது!. மூடிக்­கி­டந்த தமிழ்ச் சமு­தா­யத்­தின் விழி­க­ளைத் திறந்து, அறி­வா­சான் அண்ணா வார்த்­தெ­டுத்த அட­லே­று­க­ளைக் கொண்ட மண் இந்­தத் தமிழ் மண்! தந்தை பெரி­யார் சுட­ரேற்­றித் தந்த சுய­ம­ரி­யாதை தீபத்தை தமிழ்­நாட்­டின் மூலை­ மு­டுக் கெல்­லாம் சுடர்­வி­டச் செய்ய ஓய்­வ­றி­யாது உழைத்து முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அறி­வுச்­சு­டர் ஏற்­றிய அறி­வு­சார் நிலம் இந்­தத் தமிழ் நிலம்! இங்கே, ஆளு­நர் ரவி மட்­டு­மல்ல; அவ­ரது எஜ­மா­னர்­கள் ஆட்­ட­மெல்­லாம் வேகாது! மேலும் தெளி­வு­பெற திரா­விட இயக்க வர­லாற்­றைப் படித்­து­ணர்ந்­தால் இங்கே பல­ரின் நரித்­த­னங்­க­ளின் வால­றுக்­கப்­பட்ட விவ­ரங்­களை ஆளு­நர் ரவி போன்­றோ­ரால் உணர முடி­யும்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக போர் தொடுப்பதை ஆளுநர் லட்சியமாக கொண்டுள்ளார் : முரசொலி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Murasoli ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...